பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் - சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள்
Nov 28 2020 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோயிலில், மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக் கவசம் அணிந்திருந்த பக்தர்கள் மட்டுமே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ,மகா நந்திகேசுவரருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனைக் காட்டப்பட்டது.