திருப்பரங்குன்றம், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், சென்னை கபாலீஷ்வரர் திருக்கோவில்களில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம் - கொரோனா பரவலால் குறைவான பக்தர்களே பங்கேற்பு

Nov 30 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு, பாலதீபமும் ஏற்றப்பட்டது. மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மேல் தளத்தில், மூன்றரை அடி உயர கொப்பறையில் 300 கிலோ நெய், 160 மீட்டர் துணியால் திரி போடப்பட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், 2-ம் பிரகாரம் ஆகிய இடங்கள் முழுவதும் லட்சதீபம் ஏற்பட்டு தீப அலங்காரத்தில் கோவில் முழுவதும் ஜொலித்தது. பின்னர் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, பழனி முருகன் கோவிலில், திருக்கார்த்திகையையொட்டி, மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, விநாயகர், முருகக் கடவுளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக, முதன்முறையாக பக்தர்கள் இன்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கார்த்திகை தீபத்தையொட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில், மகா தீபம் ஏற்றப்பட்டது. தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தாயுமானவர், மட்டுவார்குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, தீபம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சியில், தாயுமானவர் சன்னதிபிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி, 300 மீட்டர் திரியிட்டு, மகாதீபம் ஏற்றப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வீடுகளின் மாடியில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் நேற்று மாலை, நந்தி மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள பாரதியார் தெருவுக்கு அம்பாள் சென்றடைந்தார். அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள மெயின் ரோட்டிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், திருக்கார்த்திகையையொட்டி, முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப்படாததால், பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் மட்டும் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00