சென்னையில் பிரசித்திப் பெற்ற மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு
Nov 30 2020 7:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பிரசித்திப் பெற்ற மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜகோபுரம் முன்பு பனை ஓலை, தென்னங்கீற்று ஆகியவை கொண்டு சொக்கப்பனை அமைக்கப்பட்டு, கற்பூரம் கொண்டு கொளுத்தப்பட்டது. திரளாள பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வயானையுடன் எழுந்தருளி, கோயில் மாட உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்கோவில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றபட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் முழுவதும் திருக் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. மூன்றாம் பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன. மூன்றாம் பிரகாரம் முழுவதும் தீப ஒளியில் மின்னியது. திருக் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.