திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி - சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடக்கம்
Dec 2 2020 8:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
இந்தாண்டு முதல் முறையாக, 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும். இதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் இன்று காலை 11 மணி முதல் www. tirupathi balaji . ap . gov . in/ என்ற இணையதளம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.