நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சுவாமி தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Jan 12 2021 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி, சுவாமி தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல்லில் பிரசித்திபெற்ற 18 ஆடி உயர ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சாத்தப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு பிற்பகலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எண்ணெய், சிகைக்காய், 5 ஆயிரத்து எட்டு லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகமும், நறுமணமிக்க மலர்களைக் கொண்டு சிறப்புப்பூஜைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு உடல் முழுவதும் தங்கக் கவசம் சாத்தப்பட்டது. ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்ட வடைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.