மாட்டு பொங்கலையொட்டி மாடுகளை அலங்கரித்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு - ஆலயங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோபூஜை
Jan 15 2021 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாட்டுப் பொங்கலையொட்டி, பல்வேறு ஆலயங்களில் உள்ள மாடுகளுக்கு, பக்தர்கள் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தூத்தக்குடி மாவட்டம் முழுவதும் மாட்டு பொங்கல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள கோசாலை ஒன்றில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்தனர். பின்னர் புதுப்பானையில் பொங்கல் வைத்து, காய்கறிகளை சூரிய பகவானுக்கு படைத்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிகார மஹா நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனைகள் நடத்தப்பட்டன. ஆலயத்தில் உள்ள பசுவிற்கு கோபூஜையும் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.