மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா : கொரோனா அகல வேண்டி சிறப்பு பிரார்த்தனை
Jan 17 2021 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவையொட்டி திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா, கடந்த 7-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.