நாகை மாவட்டம் வேதாரண்யம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பக்தர்கள் வழிபாடு
Jan 17 2021 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பக்தர்கள் இருமுடிகட்டி வழிபாடு நடத்தினர். வேதாரண்யேஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்குலம் மாரியம்மனுக்கு 50க்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்றபோது, நாட்டுப்புற கலைஞர்களின் கோலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.