நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில், தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Jan 20 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில், தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலஸ்தானத்தில் உள்ள நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் கோயில் தந்திரிகள் திருக்கொடியேற்றம் செய்தனர். இங்கு வழிபாடு செய்தால், மணமாகாதவர்களுக்கு நாகதோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதில், தமிழகம் மட்டுமின்றி கேரள பக்தர்களும் பங்கேற்று நாகராஜரை வழிபட்டனர்.