திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த 2 நுழைவாயில்கள் பக்தர்கள் செல்வதற்காக மீண்டும் திறப்பு
Jan 22 2021 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில், கொரோனாவால் மூடப்பட்டிருந்த 2 நுழைவாயில்கள், பக்தர்கள் செல்வதற்காக மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டிலில் வசூலான காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 578 ரூபாய் இருந்தன. இதனிடையே, கொரோனோ வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருந்த வெள்ளை கோபுரம் நுழைவாயில், தாயார் சன்னதி நுழைவுவாயில் ஆகியவை மீண்டும் பக்தர்கள் செல்ல திறக்கப்பட்டது.