பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி : வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி அருள்பாலித்தார்
Jan 25 2021 8:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளி காமதேனு வாகனத்தில் ரதவீதிகளில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 27ம் தேதி வெள்ளித்தேரோட்டம், திருக்கல்யாணமும், 28ம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.