பிரதோஷம் மற்றும் தை மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
Jan 25 2021 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதோஷம் மற்றும் தை மாத பெளர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்று வழிபட, 4 நாட்களுக்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நாளை தொடங்கி, வரும் ஜனவரி 29-ம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.