நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம்
Feb 23 2021 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. மாசிமக பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தியாகராஜசுவாமி பஞ்சமூர்த்தி சகிதமாக திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.