விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Feb 25 2021 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4 தினங்களுக்கு முன்பாக யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், ஊர்வலமாக கோயில் விமானத்திற்கு இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டது. வேதங்கள் முழங்க காலை சரியாக 9 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.