ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Feb 25 2021 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை, ஆனைமலை ஆழியாற்று கரையில் உள்ள மயானத்தில் நள்ளிரவில் நடைபெற்றது.