திண்டுக்கல் அருகே உள்ள கோணபட்டி கிராமத்தில் பழமையான அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
Feb 25 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே உள்ள கோணபட்டி கிராமத்தில் பழமையான அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதையொட்டி மூன்று நாட்கள் சிவாச்சாரியார்கள் வேதமந்திங்கள் முழங்க விக்னேஷ்வர பூஜை, கணபதி பூர்ணாகுதி, தீபாராதனை பூஜை, யாகபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.