அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத நித்திய சுந்தரேஸ்வரர் சன்னதி மகா கும்பாபிஷேக விழா
Feb 25 2021 7:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத நித்திய சுந்தரேஸ்வரர் சன்னதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 108 சங்குகளைக் கொண்டு பூஜைகள் நடைபெற்ற பிறகு, ஆயிரத்து 8 மூலிகைகளை வைத்து யாக வேள்விகள் நடைபெற்றன. திருநெடுங்களநாதர் மங்களாம்பிகை மற்றும் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்திகளுக்கு இருபத்தியோரு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.