திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் சங்கு சக்கரம் காணிக்கை
Feb 26 2021 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டத்தை சேர்ந்த பஞ்சு வியாபாரி ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ தங்க ஆபரணங்களை நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளார். போடிநாயக்கனூரை சேர்ந்த இலவம் பஞ்சு மற்றும் ஏலக்காய் வியாபாரம் செய்துவரும் திரு. தங்கதுரை 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ எடையுடைய தங்கத்திலான சங்கு மற்றும் சக்கரத்தை திருப்பதிக்கு சென்று காணிக்கை செலுத்தி உள்ளார்.