குன்றத்தூரை அடுத்த மாதா நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
Feb 26 2021 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குன்றத்தூரை அடுத்த மாதா நகர் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற நான்கு கால யாக சாலை பூஜைகள் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து யாக சாலையில் இருந்து கலசத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீரால் மூலவர் மற்றும் ராஜகோபுரங்கள் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.