கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
Feb 27 2021 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை கடந்த 24-ம் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 40 அடி நீள குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.