கரூரில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா
Feb 27 2021 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் தாந்தோணி கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி - பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.