புகழ்பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் மாசிமாத கொடைவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
Feb 28 2021 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாத கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான மாசி மாத கொடை விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த தந்திரிகள், ஊர்வலமாக வந்து கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், மாவட்ட ஆட்சியர் திரு. அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் திருமதி தமிழிசை, பகவதி அம்மன் கோவில் கொடியேற்ற விழாவில், ஆண்டுதோறும் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.