அய்யா வைகுண்டரின் அவதார தினம் - 4-ம் தேதி குமரியில் உள்ளூர் விடுமுறை
Mar 1 2021 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினமான மார்ச் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதரித்த நாளான மாசி மாதம் 20-ம் தேதி, அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி, வரும் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.