சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவிலில் உலக மக்கள் நலம்பெற வேண்டிய மகாபிஷேகம்
May 4 2021 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் நடைபெறக்கூடிய சித்திரை திருவோண ருத்ர மகா அபிஷேகம் நடைபெற்றது. உலக மக்கள் நலம் பெற வேண்டி சித்திரை மாத ருத்ர மகா அபிஷேகத்தில் வேத மந்திரங்கள் முழங்க 11 முறை 101 தீட்சிதர்கள் கலந்து கொண்டு 101 கலசங்கள் வைத்து பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தியும் வேத மந்திரங்கள் கூறியும் ருத்ர யாகம் செய்யப்பட்டது. பின்பு கலசத்தில் உள்ள புனித நீரால் நடராஜ பெருமானுக்கு சிதம்பரம் பொது தீட்சிதர்கள் சார்பில் மகாபிஷேகம் நடைபெற்றது.