ஸ்ரீ்ரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா - பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்
May 6 2021 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கருட மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பெரும்பாள் காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழா வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.