புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு
Jun 8 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. காரைக்காலில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீசனீஸ்வரன் பகவான் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.