மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ரத்து
Jun 14 2021 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா உள்ளிட்ட 9 நாள் திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.