நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தொடக்கம்
Jun 16 2021 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 5 தேர் நெல்லையப்பர் கோவிலில் ஓடுவதால் இந்த திருவிழா மிகவும் பிரபலமாகும். இந்த ஆண்டும் கொரோனா தொற்றின் காரணமாக சுவாமிக்கு பூஜை மட்டுமே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. இதற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்வுகளை இணையதளத்தில் நேரலையாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.