ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை - கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை
Jul 29 2021 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயிலுக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள பகுதி மதுரை மாவட்டத்திலும், மலை ஏறும் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை பகுதி, விருதுநகர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்து வரும் போதிலும், இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 8-ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, 6ம் தேதிமுதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு, பக்தர்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், மலையேறுவதற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.