திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 2 கோடியே 58 லட்ச ரூபாய் வசூல் : தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
Jul 31 2021 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் ஒரே நாளில் 2 கோடியே 58 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 837 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 8 ஆயிரத்து 67 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டது. 300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.