திருத்தணி கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை - ஆடிக் கிருத்திகையொட்டி கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை
Jul 31 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு தடைவிதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன் அறிவிப்பின்றி திருக்கோயில் பிரதான நுழைவுவாயில் அடைக்கப்பட்ட தால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், 5 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தட விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முன் அறிவிப்பின்றி திருக்கோயில் பிரதான நுழைவுவாயில் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வரும் 2 முதல் 4-ஆம் தேதி வரை மலைக்கோயிலில் நடக்கும் தெப்ப உற்சவத்தை, திருக்கோயிலுக்கு சொந்தமான இணையதளத்தில் கண்டு களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.