திண்டுக்கல் அருகே 200 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு
Sep 10 2021 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில், நன்மை தரும் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள 20 டன் எடை கொண்ட சங்கடஹர விநாயகர் திருவுருவச் சிலைக்கு, அரிசி மாவு, மஞ்சள் பொடி உள்ளிட்ட 16 வகை நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யோக நிலையில் அமர்ந்துள்ள சிவனுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன.