தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - வீடுகளிலும், ஆலயங்களிலும் மக்கள் படையலிட்டு வழிபாடு
Sep 10 2021 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும் ஆலயங்களிலும் மக்கள் படையலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில், ராஜகணபதிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு தங்கக்கவசம் சாட்டப்பட்டது. தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் கோவிலுக்கு வெளியே நின்று பொதுமக்கள் வழிப்பட்டனர். அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் 11 கிலோ எடையிலான மஞ்சள் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 100 கிலோ எடையிலான பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, 11 கிலோ எடை கொண்ட மஞ்சலில்ளான பிள்ளையாரை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வடசென்னை பாஜக மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இதனிடையே கரூர் மாவட்டம், மண்மங்கலம் குச்சியாகவுண்டனூரில் செல்வ விநாயகர் திருக்கோவிலில் கும்பாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவு பெற்று யாக குண்டங்கள் அமைத்து நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. யாக வேள்விக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டடு மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.