மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா - மெகா கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு
Sep 10 2021 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை படைக்கப்பட்டு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கி.பி 1645ம் ஆண்டு, திருமலை நாயக்கர், கட்டுமானப் பணிக்காக வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மண் எடுத்தபோது கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை, மீனாட்சியம்மன் கோவில் அணையா தீபம் அருகே நிறுவப்பட்டடு, முக்குறுணி விநாயகருக்கான சன்னதி அமைக்கப்பட்டதாக வரலாறு. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 7 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகர் சிலைக்கு பல்வேறு அபிஷேசங்கள் செய்யப்பட்டு வெள்ளி கவசமும், கிரீடமும் அணிவிக்கப்பட்டன. 18 படி பச்சரிசியில் செய்யப்பட்ட மெகா முக்குறுணி கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விழா நடைபெறும் நிலையில் கொரோனோ பாதிப்பின் காரணமாக பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றது.