உலக நன்மை வேண்டி முதியவர் விநோத வழிபாடு - ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் நான்கு ரத வீதிகளில் அங்கப்பிரதட்சணம்
Sep 11 2021 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நன்மை வேண்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில், முதியவர் ஒருவர், ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கப்பிரதட்சணம் செய்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய திருக்கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
திருவாரூர் மாவட்டம் பேரளம் கிராமத்தைச் சேர்ந்த 78 வயதாகும் திரு.நாகராஜன், காயத்ரி மந்திரம் சொல்லியவாறு, ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் நான்கு ரத வீதிகளில், அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார்.