இருப்புப்பாதையில் கிடந்த 14 கிலோ கஞ்சா பறிமுதல்
Sep 12 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், 14 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மார்க்கத்தில், கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே, காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இருப்புப் பாதையில் கேட்பாரற்றுக் கிடந்த, 2 கிலோ எடையுள்ள 7 பாக்கெட்டுகளில் 14 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர். போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.