வேளாங்கண்ணியில் 19 நாட்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி - சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பிரார்த்தனை
Sep 13 2021 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் 19 நாட்களுக்குப் பிறகு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில், திருவிழா முடிவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் கடைகள் திறக்கப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பேராலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 19 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்களும் வர தொடங்கியுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது.