ஐப்பசி மாத பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு : கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி

Sep 16 2021 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்‍கப்பட உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக ஏழு மாதங்களாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வழிபட விரும்பும் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள தேவஸ்வம் போர்டு, நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையின் 'கொரோனா நெகட்டிவ்' சான்று அல்லது தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00