சென்னை பல்லாவரத்தை அருகே ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் - தர்மசாஸ்தா ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம்
Sep 16 2021 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் - தர்மசாஸ்தா ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. யாக பூஜைகளுக்குப்பின் புனித நீர் கொண்டு வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுரக் கலசத்திற்கு அபிஷேகம் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.