மதுரை அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
Sep 16 2021 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, மேலக்கால் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக வேள்விக்குப் பின்னர், கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குறைவான பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.