சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூரில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்
Sep 16 2021 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு கோயில்களில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில், காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருத்தணி, திருச்செந்தூர் கோயில்களிலும், நாள்முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.