கள்ளழகர், பழமுதிர்சோலை முருகன் கோயில் பிரசாதத்திற்கு தரச்சான்று
Sep 17 2021 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளழகர் மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோயில் பிரசாதத்திற்கு மத்திய அரசின் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரை அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயில் மற்றும் முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை கோயில்களில், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு கோயில்களிலும் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இரு கோயில்களிலும் தயாரிக்கப்படும் உணவுகள், விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக கூறி, சுகாதாரமான கடவுள் பிரசாதம் என்ற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.