செங்கல்பட்டு அருகே காவடிகள் சுமந்தபடி பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்
Oct 23 2021 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு அருகே பிரசித்திப் பெற்ற நடுபழனி மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதுராந்தகம் அருகே உள்ள பெருக்கரணை மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, மறைமலை நகரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைரவேலுடன் பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, அன்னக்காவடி, சந்தனக்காவடி, பால்குடங்கள் ஆகியவற்றை ஏந்தியவாறு கோயிலுக்கு வந்து பாலதண்டாயுதபாணியை வழிபட்டனர்.