தர்காவில் சந்தனக்கூடு விழா - மின் அலங்காரத்தில் ஊர்வலம்
Oct 24 2021 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெற்றது. ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் அவுலியா மற்றும் சம்சுதீன் அவுலியா தர்காவில், சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, கொடியேற்றம் நடைபெற்று, பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு வலம் வந்தது.
தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.