திருச்செந்தூர் முருகன் கோவிலில் 6 மாதங்களுக்குப்பின் தொடங்கப்பட்ட தங்கத்தேர் புறப்பாடு
Oct 25 2021 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு இன்று தங்கதேர் ஓடியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் தங்க தேர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து 6 மாதத்திற்கு பிறகு கோவிலில் இன்று மீண்டும் தங்கதேர் புறப்பாடு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.