நீலகிரி மாவட்டத்தில் அறுவடைத் திருவிழாவை உற்சாமாகக் கொண்டாடிய ஆதிவாசி மக்கள்
Oct 26 2021 8:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, அறுவடைத் திருவிழாவை ஆதிவாசி மக்கள், நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.
கூடலூரை அடுத்துள்ள புத்தூர்வயல் பகுதியில், விவசாயம் செழிக்க வேண்டி, ஐப்பசி மாதத்தில் முதலாவதாக விளையும் நெற்பயிரை வைத்து, ஐந்து இன ஆதிவாசி மக்கள் கொண்டாடும் புத்தரிசி திருவிழா எனப்படும் அறுவடை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதலில் விளையும் பயிர்களை மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்தனர். அதனை அறுவடை செய்து புதுர்வயல் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு, தலையில் சுமந்து மேள வாத்தியங்களுடன் நடனமாடி ஆதிவாசி மக்கள் பேரணியாகச் சென்று, இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.