பஞ்சபூதஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேக பூஜை
Nov 23 2021 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சபூதஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் ஆயிரத்து 8 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சங்குகளில் புனிததீர்த்தம் நிரப்பி, சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். முதலாவது சோமவாரமான நேற்று மாலை உலக நன்மைக்காகவும், மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழவும் ஆயிரத்து 8 சங்காபிஷேகம் பூஜை நடைபெற்றது. இதில் குறைந்தளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.