மயிலாடுதுறை வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Nov 25 2021 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. வைத்தீஸ்வரன்கோவிலுக்கு உட்பட்ட ஆணைக்கட்டிகுளம் அருகில் உள்ள வண்டிக்காரத் தெருவில், இருந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால், அதன் அருகில் உள்ள சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.