ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் வெள்ளம் - பக்தர்களுக்கு தடை
Dec 1 2021 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இடுப்பளவு மழை நீர் உட்புகுந்ததால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தொடர் மழையால் அதிக அளவு மழை நீர் புகுந்துள்ளது. இதனால் கோபுர வாசலிலேயே இருந்தபடி பக்தர்கள் வழிபாடு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.