தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா - புகழ் பெற்ற பழனி ஆண்டவர் கோயிலில் இன்று மாலை திருத்தேரோட்டத்திற்கு ஏற்பாடு
Jan 18 2022 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனியில் உள்ள புகழ்பெற்ற பழனியாண்டவர் கோயிலில், தைப்பூசத் திருவிழாவையொட்டி இன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள், விபூதி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளும், சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் இன்றி அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று, தைப்பூசம் கொண்டாடப்படுவதையொட்டி பக்தர்கள் இன்றி, இன்று மாலை தேரோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட
உள்ளது.